ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்க ஜனாதிபதியின் விசேட பணிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தினங்களில் வழங்க முடியாதவர்களின் கொடுப்பனவுகள் ஏப்ரல் 6ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கண்ககுகளின் ஊடாக ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.